என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் விடுதியில் சென்னை வக்கீல் தற்கொலை
Byமாலை மலர்15 July 2018 12:31 PM GMT (Updated: 15 July 2018 12:31 PM GMT)
மாமல்லபுரம் விடுதியில் சென்னை வக்கீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது50). வக்கீலான இவர் தனது இரண்டாவது மனைவியுடன் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 7-ந்தேதி அவர் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள தனியார் விடுதியில் தனியாக வந்து தங்கியிருந்தார். அவரது அறை நேற்று மாலை வரை திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அறைக்கதவை திறந்து பார்த்த போது அங்குள்ள கட்டிலில் ரவீந்திரன் இறந்து கிடந்தார். அருகில் விஷப்பாட்டிலும் கிடந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
ரவீந்திரன் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்தார் என்பது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X