என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சத்திரப்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தா.புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி மற்றும் வடகாடு மலைப்பகுதிகள், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர், கள்ளிமந்தையம், அம்மாபட்டி, கரியாம்பட்டி, ஆகிய பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
தற்பொழுது கடுமையான காற்று வீசுவதால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த மாதம் காங்கேயம் தேங்காய் மார்க்கெட்டில் ஒரு டன் தேங்காய் ரூ.31 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது விளைச்சல் குறைந்த போதும் ஒரு டன் தேங்காய் ரூ.21 முதல் ரூ.22 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களிலிருந்து தினமும் ஏராளமான டன் தேங்காய்கள் காங்கேயம், வெள்ளைகோவில் மும்பை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்