search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மாணவருக்கு செக்ஸ் தொல்லை: தொழிலாளி கைது
    X

    நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மாணவருக்கு செக்ஸ் தொல்லை: தொழிலாளி கைது

    நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பிளஸ்- 2 மாணவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நாகர் கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோல் நேற்று பள்ளி முடிந்து மினி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. மாணவர் அருகே ஒருவர் வந்து அமர்ந்தார். பஸ் சென்று கொண்டிருந்த போது அந்த மாணவரின் அருகே இருந்த அவர் மாணவரிடம் திடீரென செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் கூச்சலிட்டு அலறினார். பஸ்சை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த மாணவரிடம் விசாரித்தனர். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன்னிடம் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டதாக மாணவர் கூறினார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் அந்த மாணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராசா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் மாணவருக்கு  செக்ஸ் தொல்லை கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த பொன்மணி (வயது 47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×