என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாநகராட்சியை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள்
    X

    திண்டுக்கல் மாநகராட்சியை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள்

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் முன்பு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து மார்க்கெட் வெளியே தரையில் கடை வைத்திருந்த அனைவரும் அகற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் மீண்டும் கடை வைக்க கூடாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த காய்கறி வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், படிப்பறிவு இல்லாத பெரும்பாலான மக்கள் காய்கறி வியாபாரம் மட்டுமே பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். திடீரென எங்களை காலி செய்ய கூறியதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

    வியாபாரத்துக்கு மாற்று இடம் ஒதுக்கி தர கேட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தோம் என்று தெரிவித்தனர். அதன்பிறகு தங்களது கோரிக்கை மனுவை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கி சென்றனர்.

    Next Story
    ×