search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 3-வது நாளாக நீடிப்பு
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 3-வது நாளாக நீடிப்பு

    சேலம் சென்னை பசுமை வழி சாலைக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

    காஞ்சீபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    உத்திரமேரூர் அருகே உள்ள குருமஞ்சேரி, அரும்புலியூர், சீத்தாவரம், படூர், மலையான்குள், மணல்மேடு ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ, தாசில்தார் அகிலாதேவி ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் நிலங்களை அளந்து கல் நட்டினர்.

    இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×