search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
    X

    பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

    பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). ஏ.சி. மெக்கானிக்.

    இவர் கடந்த 8-ந்தேதி இரவு உடன் வேலை பார்க்கும் பூந்தமல்லியை சேர்ந்த முரளி (33) உடன் மோட்டார் சைக்கிளில் அய்யப்பன் தாங்கலில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்தார்.

    ஆயில் மில் ரோடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்தது. இதில் அஜித்குமாரும், முரளியும் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை அஜித் குமாரும், இரவு முரளியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×