என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே தீக்குளித்த பெண் போலீஸ் மரணம்
Byமாலை மலர்7 July 2018 7:47 AM GMT (Updated: 7 July 2018 7:47 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே குழந்தை பிறந்து இறந்த சோகத்தில் தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் மெக்கானிக். இவரது மனைவி தேன்மொழி (36). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு 5 வயதில் ஞானசாய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தேன்மொழி கர்ப்பம் ஆனார். அவர் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. உறவினர்கள் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தேன்மொழிக்கு குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. அவர் குழந்தை இறந்த சோகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி திடீரென தேன்மொழி வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் தேன்மொழி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் மெக்கானிக். இவரது மனைவி தேன்மொழி (36). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு 5 வயதில் ஞானசாய் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தேன்மொழி கர்ப்பம் ஆனார். அவர் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. உறவினர்கள் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தேன்மொழிக்கு குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. அவர் குழந்தை இறந்த சோகத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி திடீரென தேன்மொழி வீட்டில் யாரும் இல்லாத போது தீக்குளித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் தேன்மொழி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X