search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபோதையில் கார் ஓட்டியதாக பாரதிராஜா மகன் மனோஜ் மீது வழக்கு
    X

    குடிபோதையில் கார் ஓட்டியதாக பாரதிராஜா மகன் மனோஜ் மீது வழக்கு

    குடிபோதையில் கார் ஓட்டியதாக பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மீது வழக்கு போடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
    பிரபல சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பி.எம்.டபிள்யூ. சொகுசு காரில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார். கார் தாறுமாறாக வேகமாக வந்ததால் போக்குவரத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    காரை மடக்கி விசாரித்தார்கள். அப்போது நடிகர் மனோஜ் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் மின்னணு ரசீது (இ-சலான்) வழங்கினார்கள்.


    பறிமுதல் செய்யப்பட்ட காரை படத்தில் காணலாம்.

    மனோஜ் ஓட்டி வந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மனோஜ், டிரைவரை அனுப்பி காரை எடுத்துச் செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் மனோஜ் காரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு போய்விட்டார்.அவர் கோர்ட்டில்தான் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். நடிகர் ஜெய் இதுபோல் குடிபோதையில் காரை ஓட்டிய வழக்கில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×