search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே விபத்து - தனியார் நிறுவன மேலாளர் பலி
    X

    கொடைக்கானல் அருகே விபத்து - தனியார் நிறுவன மேலாளர் பலி

    கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தனியார் நிறுவன மேலாளர் மரத்தில் கார் மோதி பலியானார்.

    தேவதானப்பட்டி:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஒரு காரில் கொடைக்கானலுக்கு நேற்று இரவு சுற்றுலா புறப்பட்டார்.

    நள்ளிரவு சமயம் காட்ரோடு அருகே மலைச்சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் 6 பேரும் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×