search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி கே.கே.நகரில் பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு: வாலிபர்கள் கைது
    X

    திருச்சி கே.கே.நகரில் பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு: வாலிபர்கள் கைது

    பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் தென்றல்நகர் உத்தமர் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன்.  இவரது மனைவி உதயலதா (வயது 43). இவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து  வந்தனர்.

    இந்தநிலையில் உதயலதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே கடந்த  சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருச்சி வந்தனர். பின்னர் உதயலதா டாக்டர்களிடம்  சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை சரியானதையடுத்து இருவரும் வெளிநாடு செல்ல முடிவுசெய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரமேஸ்வரன் முதலில் வெளிநாட்டிற்கு சென்றார். உதயலதா நேற்று செல்ல இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.  

    இதனிடையே அவரது  வீட்டில் வேலை பார்த்து வந்த கரூர் மாவட்டம் பூசாரியூர் மயிலம்பட்டியை சேர்ந்த சிவசக்தி (27) என்பவர், அவரது நண்பர் ஜீவானந்தம்(23) என்பவருடன் சேர்ந்து உதயலதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்ட மிட்டார். இதைத் தொடர்ந்து ஜீவானந்தத்தை அங்கு வரவழைத்ததும், இருவரும் உதயலதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். 

    அவர் நகைகளை கொடுக்க மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இருப்பினும் உதயலதா நகைகளை கழற்றி கொடுக்காததால் ஆத்திரத்தில் இருவரும் உதயலதாவின் கண் அருகே கத்தியால் குத்தியுள்ளனர். 
    இதனால் பயந்து போன அவர்  அணிந்திருந்த  3 பவுன் நகைகளை கழற்றி கொடுத்தார்.  அதன்பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

    இது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய சிவசக்தி, ஜீவானந்தம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம்  திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×