என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே பனியன் கம்பெனியில் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    பெருந்துறை அருகே பனியன் கம்பெனியில் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

    பெருந்துறை அருகே பனியன் கம்பெனியில் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருந்த டெய்லரிங் மெஷினை திருடி சென்ற 2 பேரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

    இந்த பனியன் கம்பெனியில் மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், ஹய்னாபாத் பகுதியை சேர்ந்த மெக்டூக் ஹாஜ் என்பவரது மகன் தினிசலாம் ஹாஜ்(23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அனார் அலி என்பவரது மகன் ரெசிதுல் ஹாஜ்(22) ஆகிய இருவரும் டெய்லராக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் நேற்று மதியம் உணவு இடைவேளை போது டேபிளில் இருந்த 3 டெய்லரிங் மெஷின்களை கழற்றி கொண்டு வெளியே செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த அந்த நிறுவனத்தின் சூப்பர் வைசரான பவானி மைலம் பாடி பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரது மகன் சுதாகரன்(28) அவர்கள் இருவரையும் பார்த்து சத்தம் போடவே, அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மற்ற பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிறகு பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெருந்துறை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மெஷின்கள், பனியன், ஜட்டிகளில் இணைக்கப்படும் பிராண்ட் லேபிள்கள் 4 ஆயிரம் ஆகிவற்றை பறிமுதல் செய்து இருவரையும் பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    வழக்கினை விசாரித்த நீதிபதி ரெய்க்கானா பர்வீன் அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×