search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை போலீசில் காதலியுடன் தஞ்சமடைந்த கூலி தொழிலாளி
    X

    வடமதுரை போலீசில் காதலியுடன் தஞ்சமடைந்த கூலி தொழிலாளி

    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதலியுடன் கூலித் தொழிலாளி தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த கண்ணன் மகன் சரத்குமார் (வயது 23). சந்தைப் பேட்டையில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினசரி அய்யலூரில் இருந்து வையம்பட்டி சந்தைக்கு வேனில் செல்வது வழக்கம்.

    அப்போது வைரம் பட்டியைச் சேர்ந்த யாஸ்மின் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பெண் வீட்டார் அச்சுறுத்தல் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×