search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள் -  சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    2 வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள் - சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    சிவகாசியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை நாய்கள் கடித்து குதறியதை தொடர்ந்து குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சிவகாசி:

    சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள அரசன் காம்பவுண்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். அச்சக தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஜான் (வயது 4), ஜாய்தெரசா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். மாலையில் குழந்தை ஜாய்தெரசா தனது வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் கழிவுப் பொருட்களை தின்று கொண்டிருந்த நாய்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு குரைத்த படி சிதறி ஓடி உள்ளன.

    அப்போது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நாய்கள் சுற்றி நின்று கடித்து குதறியுள்ளன. இதில் ஜாய்தெரசாவுக்கு காது, தலை, கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிவகாசியில் பல இடங்களில 500-க்கும் மேற்பட்ட நாய்கள் தற்போது உள்ளன. பல இடங்களில் பள்ளி குழந்தைகளையும், முதியவர்களையும் நாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பை கொட்டப்படும் இடத்தில் கோழி மற்றும் மீன் கழிவுகளை சிலர் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் குப்பை கொட்டும் பகுதிக்கு வரும் நாய்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை கடித்துவிடுகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 
    Next Story
    ×