என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராமதிலகம் (வயது 15). இவர்அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும் போதுஅதேபகுதியை சேர்ந்த கொத்தனார் ஜனார்த்தன்(20)என்ற வாலிபர் இவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி ராமதிலகம் கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள மாணவி ராமதிலகம் நேற்று காதலன் ஜனார்த்தனன் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அவர் உன்னை திருமணம்செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். பின்னர் அவரை திட்டி வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி ராமதிலகம் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் எழிலரசி இதுகுறித்து ஜனார்த்தனன் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்