search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவலூர் அருகே ஊர் நாட்டாண்மை தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருநாவலூர் அருகே ஊர் நாட்டாண்மை தூக்குப்போட்டு தற்கொலை

    மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பாக ஊர் நாட்டாண்மையை ஆபாசமாக திட்டியதால் மன வேதனை அடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது65). இவரது மனைவி அஞ்சலை.

    சந்திரசேகர் ஊர் நாட்டாண்மையாக இருந்து வந்தார். அந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பாக சந்திர சேகர் மற்றும் சிலர் பேசினர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    அப்போது சில வாலிபர்கள் சந்திர சேகரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் பார்த்தீபன் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், மணி ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×