search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னை - கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 6.40, 9, 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 7, 8.15, 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * மூர்மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பொன்னேரி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 8.25, 9.50, 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைபோல் சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்பேட்டை-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×