என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரிகள் மோதி தீப்பிடித்தது - 3 பேர் உடல் கருகி பலி
ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கோழி ஏற்றிவந்த லாரி, மற்றொரு கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்ததில் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே கருதி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கோழிகள் ஏற்றிய லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
தேனி மாவட்டம் ராயப்பன் பட்டியை சேர்ந்த டிரைவர் சகாயம் (வயது 38) லாரியை ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், நாயுடு மங்களத்தை சேர்ந்த மனோகரன் (42), தர்மபுரி மாவட்டம் அஞ்சல்வாடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (24) ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியும் கவிழ்ந்தது. அதில் இருந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் சங்கர் படுகாயம் அடைந்தார். லாரி தீப்பிடித்ததில் அதில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் கருகி இறந்தன.
விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து பலியான 3 பேரின் உடலையும் மீட்டனர். காயமடைந்த சங்கருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீபெரும் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கோழிகள் ஏற்றிய லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
தேனி மாவட்டம் ராயப்பன் பட்டியை சேர்ந்த டிரைவர் சகாயம் (வயது 38) லாரியை ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், நாயுடு மங்களத்தை சேர்ந்த மனோகரன் (42), தர்மபுரி மாவட்டம் அஞ்சல்வாடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (24) ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிகாலை 5மணி அளவில் தண்டலம் பகுதியில் லாரி வந்த போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் இயக்க முயன்றார்.
அப்போது பின்னால் கோழி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில், கோழி ஏற்றிய லாரியின் முன்பகுதி நசுங்கியது. மேலும் தீப்பிடித்தது. இதனால் காயம் அடைந்த டிரைவர் சகாயம் மற்றும் மனோகரன், வெற்றிவேல் ஆகியோரால் வெளியே வர முடியவில்லை. சிறிது நேரத்தில் தீயில் சிக்கிய அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து பலியான 3 பேரின் உடலையும் மீட்டனர். காயமடைந்த சங்கருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீபெரும் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






