search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கு ஜூலை மாதம் காவிரி நீர் திறப்பு - கர்நாடகத்துக்கு உத்தரவிட முடிவு
    X

    தமிழகத்துக்கு ஜூலை மாதம் காவிரி நீர் திறப்பு - கர்நாடகத்துக்கு உத்தரவிட முடிவு

    ஜூலை மாதம் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட 2-ந்தேதி நடைபெறும் முதலாவது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட முடிவு செய்துள்ளது.#CauveryManagmentCommission #Cauveryissue

    சென்னை:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அதை கெஜட்டில் வெளியிட்டது.

    அடுத்தகட்டமாக காவிரி ஆணையை உறுப்பினர்களை நியமிக்குமாறு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம், கேரளா, புதுவை அரசுகள் தங்கள் பிரதிநிதிகளை நியமித்த நிலையில் கர்நாடக அரசு தாமதப்படுத்திவந்தது.

    இதையடுத்து மத்திய அரசு தாமாகவே முன்வந்து கர்நாடகத்தின் பிரதிநிதிகளை அதிரடியாக நியமித்தது. இதற்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் வருகிற ஜூலை 2-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் மாதந்தோறும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவரங்களை நடுவர் மன்றம் குறிப்பிட்டு உள்ளது. அதன் படி ஜூலை மாதம் தமிழகத்துக்கு 34 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    2-ந்தேதி நடைபெறும் முதலாவது ஆனைய கூட்டத்தில் ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவிட முடிவு செய்துள்ளது.

     


    காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டத்தில் என்னென்ன பொருள் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் 4 மாநில பிரதிநிதிகளுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதில் முதலாவது தவணையாக ஜூலை மாதத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியது பற்றி இடம் பெற்றுள்ளது. ஜூலை மாதத்தின் 30 நாட்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை 3 இடைவெளிகளில் இந்த தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் 3 மாநிலங்களிலும் உள்ள 8 அணைகளின் நீர் இருப்பு விவரம், பாசன பரப்பு கடந்த ஜூன் மாதத்தில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    முதலாவது காவிரி ஆணையை கூட்டத்துக்கு மத்திய அரசின் பிரதிநிதியான மசூத்உசைன் தலைமை தாங்குகிறார். கேரளா, தமிழ்நாடு, புதுவை, கர்நாடக மாநில நீர்ப்பாசன துறை செயலாளர்கள் டிங்கு பிஸ்வால், எஸ்.கே.பிரபாகர், ஏ.அன்பரசு, ராஜேஷ் சிங், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் மத்திய வேளாண்மை- நீர் வளத்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். #CauveryManagmentCommission #Cauveryissue

    Next Story
    ×