search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபாதிமங்கலம் அருகே மகளிர் குழு தலைவி தீக்குளித்து தற்கொலை
    X

    வடபாதிமங்கலம் அருகே மகளிர் குழு தலைவி தீக்குளித்து தற்கொலை

    கடன் பணத்தை எடுத்து கணவர் மது குடித்ததால் மகளிர்குழு தலைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி நிலா (வயது 23). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    நிலா மகளிர்குழு தலைவியாக இருந்து வந்தார். அவர் குழுவில் இருந்து ரூ.25 ஆயிரம் கடனாக வாங்கி வைத்திருந்தார்.

    அந்த பணத்தை எடுத்து மதியழகன் மது குடித்துள்ளார். இதுபற்றி அறிந்த நிலா மதியழகனை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிலா தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மகளிர்குழு தலைவி தீக்குளித்து இறந்த சம்பவம் கருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×