search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
    X

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

    பெரம்பலூர் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தினக்கூலி ரூ.380 வழங்கக்கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக ரூ.380 வழங்க கோரியும், கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அன்று மின்வாரிய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் மின்ஊழியர் மத்திய அமைப்பான சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழி லாளர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். பெரம்பலூர் துறைமங் கலம் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரதத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அழகர்சாமி தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் அகஸ்டின், பொருளாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் செல்லதுரை, மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன், மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் கலையரசி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×