search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்தால் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்தால் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சிலை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது முக்கிய பிரமுகர்களுக்கோ உரிய முன் அனுமதி இல்லாமல் சிலைகள் நிறுவ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் எவரேனும் முன் அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து சிலை அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் பொதுஅமைதியை குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும், எவரேனும் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சட்டத்தை மிறும் வகையில் அரசியல் தலைவர்களுக்கு சிலைவைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சிலையை நிறுவ முற்படுவோர் மட்டுமின்றி, உரிய அனுமதியின்றி சிலையை உருவாக்கும், வடிவமைக்கும் நபர்கள் மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
    Next Story
    ×