என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே மணல் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்11 Jun 2018 12:04 PM GMT (Updated: 11 Jun 2018 12:04 PM GMT)
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ரிஷிவந்தியம்:
மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் அரும்பராம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் பரமனந்தல் பகுதியை சேர்ந்த சின்னராசு (வயது 24) என்பதும், முஸ்குந்தா நதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராசுவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காட்டு வன்னஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மணி நதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் அரும்பராம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் பரமனந்தல் பகுதியை சேர்ந்த சின்னராசு (வயது 24) என்பதும், முஸ்குந்தா நதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராசுவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காட்டு வன்னஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மணி நதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X