என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    லாலாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    லாலாபேட்டை:

    லாலாப்பேட்டை மேட்டு மகாதானபுரம் வீரமலை என்பவரின் மகன் சந்திரசேகர் (55) கொத்தனார். இவர் கடந்த 3-ந் தேதி லாலாபேட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் மகாதான புரத்துக்கு சென்றார். அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த  பாலசுப்பிரமணியன் (30) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எதிர் பாராத விதமாக சந்திரசேகர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×