search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசியில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது
    X

    வந்தவாசியில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது

    வந்தவாசியில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 28). இவர் சீதாராம நாயுடு தெருவில் மொத்த விற்பனைக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் கடை உரிமையாளர் சங்கர்லால் அவரது சகோதரர் சேட்டான் (22) தப்பியோடி விட்டனர். கடை ஊழியர்களான சிவராம் (21), அரிஷ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடை உரிமையாளர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×