என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்பிடிப்பு பகுதியில் மழை - பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு
    X

    நீர்பிடிப்பு பகுதியில் மழை - பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிப்பு

    பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள 2-வது பெரிய அணையான பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது.

    இந்த நிலையில் நேற்று அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை முதல் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1732 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டமும் உயர்ந்து 54.49 அடியாக உள்ளது. இன்று மாலை 55 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,

    நீர் மட்டம் 55 அடியை தொடும் நிலையில் இருப்பதால் விவசாயத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.

    Next Story
    ×