search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி அடித்துக் கொலை
    X

    அருப்புக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி அடித்துக் கொலை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கஞ்சா வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பன்னிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 24). கஞ்சா விற்று வந்தார்.

    இவர் எம்.ரெட்டியபட்டி சென்று கஞ்சா விற்றபோது அங்கு மாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் வியாபாரி மல்லிகார்ஜூனன் (47) வந்தார்.

    அவர்கள் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் ரஞ்சித் குமார் பேசிய பேச்சு மல்லிகார்ஜூனனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் சரமாரியாக தாக்கினார். இதில் ரஞ்சித் குமார் தலையில் காயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எம்.ரெட்டிய பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மல்லிகார்ஜூனனை தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×