என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் அருகே நின்ற லாரி மீது கார் மோதல்: பெண் பலி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் கடலூருக்கும் சேந்தனேந்தலுக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையிலிருந்து கீழக்கரை நோக்கி வந்த கார் லாரியின் பின்புறமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள அலவாய்க் கரைவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி சாந்தி (வயது35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாந்தியின் தந்தை முத்து ராமலிங்கம் (70), சித்தப்பா ராமச்சந்திரன் (60), உறவினர் முனித்துரை (53) மற்றும் கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்