என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவை:
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். கவிதா, சரவணகுமார் மற்றும் வீனஸ்மணி, கே.பி.எஸ். மணி, மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் உமாபதி, துளசிராஜ், குருசாமி, சவுந்திரகுமார், இஸ்மத், கருணாகரன், குறிச்சி வசந்த், கு.பே. துரை, வக்கீல் கருப்பசாமி, கோவை போஸ், லாலிரோடு செல்வம், ராமநாகராஜ், ஆனந்தன், உமாமகேஸ்வரி, திலகவதி, ராமசாமி, காட்டூர் சோமு, எம்.எஸ். பார்த்தீபன், ஜனார்த்தனன், இஸ்மாயில், ரகுமத்துல்லா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்