search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்காலில் திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    காரைக்காலில் திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு கடை வீதியில் உள்ள தனியார் மதுபான கடையில், திருச்செந்தூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் (வயது34) வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என தனது நண்பர்களிடமும், பெற்றோரிடமும் கூறி வந்தார்.

    இந்நிலையில் இரவு மதுபான கடையை மூடியப்பிறகு, கடையின் மாடியில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜபாண்டியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெடுங்காடு போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×