என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காடையாம்பட்டி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த பண்ணபட்டி ஊராட்சி காங்கியானூரில் சுமார் 500 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக சரியான முறையில் குடிநீர் வழங்காமல் குடிநீர் தட்டுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் வசதி அமைத்து தரும்படியும், நாள் ஒன்றுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்குவதாக கூறபட்ட நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் அன்று முதல் இன்று வரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தின்னபட்டி-பண்ணபட்டி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அறிந்த தீவட்டிபட்டி போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்