என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிழக்கு கடற்கரை சாலையில் டோல்கேட் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Byமாலை மலர்19 May 2018 7:42 AM GMT (Updated: 19 May 2018 7:42 AM GMT)
ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் டோல்கேட் பகுதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னைபாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு பகுதிகளான கோவளம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் டோல்கேட் அமைத்து வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 54 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு கழிப்பிடம், ஓய்விடம், சுத்திகரிப்பு குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன் குறைந்த சம்பளமும் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி நேற்று பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் டோல்கேட் பகுதி ஊழியர்கள் கட்டண ரசீது போட மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் உத்தண்டியில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.#tamilnews
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னைபாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு பகுதிகளான கோவளம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் டோல்கேட் அமைத்து வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 54 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு கழிப்பிடம், ஓய்விடம், சுத்திகரிப்பு குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்காமல் அந்த நிறுவனம் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன் குறைந்த சம்பளமும் கொடுப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஊதிய உயர்வு, அடிப்படை வசதி, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி நேற்று பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் டோல்கேட் பகுதி ஊழியர்கள் கட்டண ரசீது போட மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் உத்தண்டியில் இருந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X