search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் நியமனம் - துணைவேந்தர் வாழ்த்து
    X

    அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் நியமனம் - துணைவேந்தர் வாழ்த்து

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதனுக்கு துணைவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதனை 3.5.2018 முதல் மூன்றாண்டுகளுக்கு நியமித்துள்ளார்.

    இவர் சிறந்த கல்வியாளர். 32 ஆண்டுகளாக கணிதவியல் பாடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பின்தங்கிய மாணவர்கள் பலரையும் தனது கற்பிக்கும் திறனால் முன்னுக்கு கொண்டு வந்தவர்.

    சுவாமிநாதன் கணிதத்தில் எம்.எஸ்.சி.,எம்.பில். மற்றும் கணிதவியல் பாடத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    2002- 2003-ம் கல்வியாண்டில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 2005-ம் ஆண்டு “இந்திய கல்வியியலில் சிறந்த ஆசிரியர்”விருது பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டில் இருந்து சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையராக பணியாற்றி வருகிறார். பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு கணிதப் பாடப்புத்தகங்களை எழுதி உள்ளார்.

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். வெளிநாடுகளுக்கும் கல்விப்பயணமாக சென்றுள்ளார்.

    அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், துணைவேந்தர் சுப்பையாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    Next Story
    ×