search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் மதுக்கடையில் மோதல் - வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து - 3 பேர் கைது
    X

    வில்லியனூரில் மதுக்கடையில் மோதல் - வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து - 3 பேர் கைது

    வில்லியனூரில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனுர் கோட்டைமேட்டை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது31) இவர் நேற்று மாலை அங்குள்ள தனியார் மதுக்கடையில் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து கொண்டிருந்த வில்லியனூர் நடராஜன் நகரை சேர்ந்த அய்யனார் (24), சுபாஷ் (21) மற்றும் முத்துபிள்ளை பாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்த அன்பரசன் (26) ஆகியோருக்கும் ஞானசேகருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஞானசேகரை சரமாரியாக தாக்கினர். பீர்பாட்டிலாலும் குத்தினர். இதில் ஞானசேகருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்குபதிவு செய்து அய்யனார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×