search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே கார்கள் மோதல் - குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    X

    பெரம்பலூர் அருகே கார்கள் மோதல் - குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

    பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். #Accident
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் இன்று அதிகாலை சென்னையை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையை மீறி எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். #Accident
    Next Story
    ×