search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே இன்று காலை லாரி மோதி வாலிபர் பலி
    X

    பண்ருட்டி அருகே இன்று காலை லாரி மோதி வாலிபர் பலி

    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள தாளம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43), பலாப்பழ வியாபாரி. இவரது மகன் விஜய் (20). இன்று காலை பழனிச்சாமி தனது மகன் விஜயை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் குள்ளஞ் சாவடிக்கு புறப்பட்டார்.

    பண்ருட்டி அருகே உள்ள வேகாகொல்லை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிரே டிப்பர் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பழனிச்சாமியும் அவரது மகன் விஜயும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய் பரிதாபமாக இறந்தார். பழனிச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து காடாம் புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் குமராய்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×