search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது
    X

    காங்கயம் அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காங்கயம் அருகே கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள பழைய கோட்டை மன்றாடியார் நகரை சேர்ந்தவர் தங்கவேலு(வயது42). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து டிரைவராக உள்ளார்.

    இவரது மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பூபதிக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு திடீரென குடும்ப தகராறு எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தங்கவேலுவை முருகேசன் கத்தியால் குத்தினார்.

    இதில் தங்கவேலு பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    முருகேசன் கொலை செய்து விட்டு தப்பி ஓட உடந்தையாக இருந்ததாக பூபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பூபதி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×