என் மலர்
செய்திகள்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தா.மோ.அன்பரசன் வழங்கினார்
சென்னை:
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாள் விழாவாக காஞ்சி வடக்கு மாவட்டத்தில் மாவட் டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி 2257 கிளைகளிலும் தி.மு.க.கொடி ஏற்றினார்கள்.
மாவட்டத்தில் உள்ள 38 ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 3 ஆயிரம் பேருக்கு உணவு-உடை வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் 1 லட்சம் ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.
இதை மாவட்டம் முழுவதும் சென்று தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பல இடங்களில் பிரியாணியும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந்தேதி அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தா.மோ.அன்பரசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி செங்கல்பட்டு, குரோம்பேட்டை,குன்றத்தூர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணி வித்தார்.
செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 29 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்.
குழந்தைகளுக்கு புத்தாடைகள், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. படப்பையில் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதே போல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை தா.மோ. அன்பரசன் வழங்கினார்.






