என் மலர்
செய்திகள்

திருமருகல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் பலி
திருமருகல்:
நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள சின்னைய்யன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சேகர் நேற்று இரவு 8 மணி அளவில் சீயாத்த மங்கையில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திட்டச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முடிகொண்டான் சமத்துவப்புரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் பலியான சம்பவம் திருமருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






