search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுவாஞ்சேரி-பொத்தேரி இடையே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் தாமதம்
    X

    கூடுவாஞ்சேரி-பொத்தேரி இடையே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் தாமதம்

    கூடுவாஞ்சேரி-பொத்தேரி இடையே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில் உடனடியாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்வே ஊழியர்கள் வந்து சரி செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. மறைமலைநகர் - பொத்தேரி இடையே வந்த போது சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மின்சார ரெயில் உடனடியாக நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னால் வந்த அனைத்து மின்சார ரெயில்களுக்கும் தெரிவிக்கப்பட்டதும் அந்தந்த ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    சுமார் 10-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணி அளவில் சிக்னல் சரிசெய்யப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

    செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #tamilnews #Signalfailure #electrictrains 

    Next Story
    ×