என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிசை மாற்று வாரிய வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி
Byமாலை மலர்28 Nov 2017 11:59 AM GMT (Updated: 28 Nov 2017 12:00 PM GMT)
குடிசை மாற்று வாரியத்தால் வீடு பெற்றவர்கள், வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
குடிசை வீடுகளின் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்படுகிறது. வீடு கிடைக்கப் பெற்றவர்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் குடிசையிலே வசிப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கென்னூர் சாலையை ஆக்கிரமித்து பலர் குடிசை அமைத்துள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பை அறிவித்தனர். கென்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
குடிசை மாற்று வாரியத்தால் வீடு பெற்றவர்கள், வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு பெற்றவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அடையாள அட்டையை வீட்டில் ஒட்ட வேண்டும் எனவும் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வீடு பெற்றவர்கள் தங்களது விபரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், அப்படி தெரிவிக்காத பட்சத்தில் ஒதுக்கீட்டை ரத்து செய்து வேறு ஒருவருக்கு அதே வீட்டை ஒதுக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிசை வீடுகளின் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்படுகிறது. வீடு கிடைக்கப் பெற்றவர்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் குடிசையிலே வசிப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கென்னூர் சாலையை ஆக்கிரமித்து பலர் குடிசை அமைத்துள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பை அறிவித்தனர். கென்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
குடிசை மாற்று வாரியத்தால் வீடு பெற்றவர்கள், வீட்டை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு பெற்றவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அடையாள அட்டையை வீட்டில் ஒட்ட வேண்டும் எனவும் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வீடு பெற்றவர்கள் தங்களது விபரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், அப்படி தெரிவிக்காத பட்சத்தில் ஒதுக்கீட்டை ரத்து செய்து வேறு ஒருவருக்கு அதே வீட்டை ஒதுக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X