என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் வாலிபரிடம் வழிப்பறி செய்த ரவுடி கைது
வாலிபரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
மானாமதுரை தாலுகா பிரமனூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 25). இவர் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை சாலையில் சென்றார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் அவரை வழிமறித்தார். திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி ராதாகிருஷ்ணனிடம் இருந்த 1,200 ரூபாயை பறித்துச் சென்றுவிட்டார். இது குறித்து மானாமதுரை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பணம் பறித்துச் சென்றது உடைகுளத்தைச் சேர்ந்த ரவுடி முத்துப்பாண்டி (26) என தெரியவந்தது.
தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன.
தலைமறைவாக இருந்த ரவுடி முத்துப்பாண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மானாமதுரை தாலுகா பிரமனூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 25). இவர் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை சாலையில் சென்றார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் அவரை வழிமறித்தார். திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி ராதாகிருஷ்ணனிடம் இருந்த 1,200 ரூபாயை பறித்துச் சென்றுவிட்டார். இது குறித்து மானாமதுரை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பணம் பறித்துச் சென்றது உடைகுளத்தைச் சேர்ந்த ரவுடி முத்துப்பாண்டி (26) என தெரியவந்தது.
தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன.
தலைமறைவாக இருந்த ரவுடி முத்துப்பாண்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






