என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
    X

    புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை நகர நிலவரித்திட்டத்தின் சார்பில் 26 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களுக்கான ஆணைகளும், சமூக நலத்துறையின் சார்பில் சுயதொழில் பயிற்சி முடித்த 15 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்க்கு ரூ.2 லட்சம் மதிப்பில் சுயதொழில் தொடங்க நிதியுதவிக்கான காசோலைகளும்,

    9 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்கார்ப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.80,000 மதிப்பில் தொழில் கடன் நிதி உதவித்தொகைக்கான காசோலைகளும் வழங்கினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாதாந்திர உதவித்தொகை கோரி 5 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 2 மனுக்களும், வங்கிக் கடனுதவி கோரி 3 மனுக்களும், அங்கன்வாடி பணியிடம் கோரி 5 மனுக்களும், மருத்துவத்துறையில் வேலை கோரி 1 மனுவும் என மொத்தம் 16 மனுக்களை பெற்று இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
    Next Story
    ×