என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே முதியவர் மர்ம மரணம்: போலீசில் மனைவி புகார்
வேதாரண்யம் அருகே குட்டையில் தவறி விழுந்து முதியவர் பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது70). இவர் சம்பவத்தன்று ஆடுகளுக்கு தழை பறிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள குட்டையில் பிணமாக கிடந்தார். அவர் குட்டையில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விசித்ரா மேரி, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி முத்தம்மாள் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது70). இவர் சம்பவத்தன்று ஆடுகளுக்கு தழை பறிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள குட்டையில் பிணமாக கிடந்தார். அவர் குட்டையில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விசித்ரா மேரி, சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி முத்தம்மாள் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story