என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 10 லாரிகள் பறிமுதல்
காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மணல் கடத்திய 10 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் திருப்புட்குழி பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் போலியான ரசீதுகள் மூலம் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து 8 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேபோல் காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியில் மணல் கடத்திய 2 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பாலுசெட்டி சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் திருப்புட்குழி பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் போலியான ரசீதுகள் மூலம் மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து 8 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேபோல் காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியில் மணல் கடத்திய 2 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை பாலுசெட்டி சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story






