search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    பவானி ஆற்றில் குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவதால், அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட விவசாயத்துக்கும் குடிநீர் ஆதராமாகவும் உள்ள பவானிசாகர் அணைக்கு கடந்த வாரம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடிவரை கூடியது. இதையொட்டி பவானி ஆற்றில் குடிநீருக்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

    நேற்று 930 கனஅடி வீதம் வந்த தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 182 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அதேசமயம் பவானி ஆற்றில் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 42.81 அடியாக இருந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மழை பெய்தால் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும்.
    Next Story
    ×