என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது
    X

    பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது

    காஞ்சீபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ. 5 லட்சம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் பிரேம். இவர் ரங்கசாமிகுளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 19-ந் தேதி அவர் ரூ. 5 லட்சத்துடன் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென பிரேமை தாக்கி ரூ. 5 லட்சத்தை பறித்து சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட காஞ்சீபுரம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த விஜய், கணேசன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம் அதிக அளவு பணம் கொண்டு செல்வதை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கைதான 3 பேரிடமும் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×