என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலையூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை
    X

    சேலையூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை

    சேலையூரில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த கவுரிவாக்கம் சாந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி நேற்று காலை அவர் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். “நாங்கள் போலீஸ்காரர்கள். இப்பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகம் நடக்கிறது. நீங்கள் நகைகளை அணிந்து செல்ல வேண்டாம்” என்று எச்சரித்தனர். பின்னர் மர்ம நபர்கள் 2 பேரும் விஜயலட்சுமி அணிந்திருந்த 21 பவுன் நகையை கழற்றி பேப்பரில் மடித்து கொடுத்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    விஜயலட்சுமி வீட்டுக்கு வந்ததும் பேப்பரை பிரித்து பார்த்தார். அதில் செங்கல் துண்டுகள் இருந்தது. வாலிபர்கள் 2 பேரும் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    Next Story
    ×