என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் மாணவி-நர்சு மாயம்
முதுகலை மாணவி மற்றும் நர்சு மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி செக்காலை தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் பிரியதர்சினி (வயது 21). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் கல்லூரி சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்காததால், காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி பிரியதர்சினியை தேடி வருகிறார்.
காரைக்குடி செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் மீனாட்சி (19). திருமணமான இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






