என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் சிவகாஞ்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த முத்துவை கைது செய்தனர்.
இதேபோல சிறுகாவேரி பாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த சங்கரனை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






