என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி
- மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.
- அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பனைமடல் சவுக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல்.
இவரது மகன் கோவிந்தன் (வயது 32). இவர் நேற்று மதியம் பனைமடல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நள்ளிரவு ஒரு மணி அளவில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்–பட்டணத்தை அடுத்த பைத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.
இவரது மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் நேற்று ஏற்காடு மலை பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.
இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






